ரா.ர: எங்கப்பா தலைவர் வர நேரமாச்சி இன்னும் பதிவருங்க ஒருத்தர் கூட வரலை.
மு.காளை: தல! கெளம்பிட்டாங்களாம் தல. வர வழியில ஓட்டேரி முக்கு சந்துல ஒரு மெஸ்ல இட்லி வடகறி சூப்பர்னு கேபிள் அங்க எல்லாரையும் கூட்டிட்டு போய்ட்டாராம். வந்துட்டே இருக்காங்களாம். தோ வந்துட்டாங்க.
ரா.ர: வாங்க வாங்க. பதிவர்லாம் அந்த பக்கம் உக்காருங்க.
(கேபிளார் எப்பவும் போல் ஆட்டோவில் வந்து லேட்டாக வருகிறார்.)
ரா.ர: ஏப்பா காளை. இவரு படவுலகா? பதிவுலகா?
வடிவேலு: நான் சொல்றேன் நான் சொல்றேன். ரெண்டும். இவருதான் கேபிள் சங்கர். கவிதையெல்லாம் எழுதுவாரு. தோ எண்டர் ஆய்ட்டாரு. கூப்பிட்டு நம்ம பக்கம் இழுத்து விடுங்க பாதி செயிச்சிட்டா மாதிரி.
ரா.ர: ஓ. அதனாலதான் இவரு எண்டர் கவியா?
கேபிள்: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ். அண்ணே! ரொம்ப சந்தோஷம்ணே. நீங்களாவது எண்டர் கவிதைய புரிஞ்சி வெச்சிருக்கீங்களே.
தண்டோரா: தோ! தோ! இந்த பக்கம் வாங்கண்ணே. இப்புடியே அந்த பக்கம் போனா அப்புறம் எதிர் இடுகை போடுவேன்.
கேபிள்: இருப்பா இருப்பா. நான் எந்த பக்கமும் இல்லை. நடுவில. நியாயமாதான் பேசுவேன்.
ஆ.வீ: நியாயம் பேச தலைவர் உந்தி. வேற யாரும் நியாயம் பேச அருகதை உள்ளதா என சிந்தித்து….சரி சரி. கட்சி மீட்டிங்னு நினைச்சிட்டேன். இதோ தலைவர் ஒச்சிந்தி..
பாலாசி: அய்யோஓஓ(மயங்கி விழுகிறார். கதிர் பண்ணாரி அம்மன் திருநீறு பூசி, தம்பி வேணாம்னா கேக்காம நமீதாவ பார்க்கணும்னு முன்வரிசையில வந்தா இப்புடிதான்.பின்னாடி போய் உக்காரு ராசா)
ஆ.வீ: தலைவர் ஒச்சிந்தி. வாழ்க!
தலைவர்: வணக்கம். வணக்கம். இதாருப்பா நடுவில எனக்கு எதிரா இன்னோரு சேர் போட்டது. அம்மா வராங்களா?
ஆ.வீ: லேது லேது. அது கேபிளாருக்கு. அவரு நியாயமா ரெண்டு பக்கமும் சேராம இருக்காராம்.
தலைவர்: அன்பு உடன் பிறப்பே. அண்ணா அன்றே சொன்னார். நன்றே சொன்னார். நாட்டாமை என்று ஒன்று உண்டென்றால் அது தம்பி…
ஆ.வீ: தலைவா! நீங்கதான் துண்டு போட்டிருக்கீங்க. நீங்கதான் நாட்டாமை. டவுட்டே லேது.
தண்டோரா: ஏன் கேபிள். அப்போ சொம்பு…
கேபிள்: (சிரிப்பை அடக்க முடியாமல்) தலைவரே. அடக்கி வாசிங்க. போகும்போது கவனிச்சிக்கறேன். அய்யோ சாமி முடியல..
ரா.ர: இவங்கல்லாம் பதிவருங்க. இவரு கேபிள் சங்கர். குறும்படம் எல்லாம் எடுத்திருக்காரு. அடுத்ததா படம் எடுக்க போறாரு. அதனால திரையுலகத்தை
தண்டோரா: அல்லோ. இந்த கதையெல்லாம் வேணாம். அவர் பதிவ பார்த்தீங்களா? பதினெட்டே நாளில் எவ்ளொ ஹிட் வாங்கியிருக்காருன்னு.. அதெல்லாம் விட அவர் எங்க கூட இருக்கிறப்பதான் யூத்தா இருப்பாரு. உங்க மேக்கப் கூட்டத்துல அந்த இமேஜ் போய்டும். சினிமால எண்டர் கவிதை எடுக்க முடியுமா? வந்துட்டாரு..பதிவர் கேபிள்யா. பதிவர் கேபிள்.
கார்க்கி:மி த ஃபர்ஸ்ட். கலக்கிட்டீங்க தலைவா
கேபிள்: தண்டோரா.
)
வானம்பாடி: அசத்தல்
டி.வி.ஆர் :
)
பட்டர்ஃப்ளை சூர்யா: தலைவா! பிரமாதம்.
தலைவர்: இருங்கப்பா இருங்கப்பா. என்ன இது
ரா.ர: இதாங்க. இவங்கல்லாம் ஃபாலோயர்ஸ். இடுகை போட்ட கையோட இப்படியே ஏத்தி விடுவாங்க.
தலைவர்: ஹூம். நம்ம தொண்டனுங்க இவ்ளோ சுறுசுறுப்பா இருந்தா எவ்ளோ காசு மிச்சம்.
ஆ.வி.: தலைவரே. இவங்க இண்டிக்கி பவர் கட் பண்ணிட்டா? இடுகை போட முடியாதில்ல. எப்புடீஈஈ
தலைவர்: முதல்ல உன் பவர் கட் பண்ணனும் ஓவரா ஊத்துற. சரி சரி! இப்போ என்ன பிரச்சன அத சொல்லுங்க.
ரா.ர: அய்யா.. பொங்கலுக்கு அய்யா மனசிறங்கி 5 காட்சி நடத்தலாம்னு அனுமதி குடுத்தீங்க. ராத்திரி ஒன்னரை மணிக்கு படம் முடிஞ்சி 2 மணிக்கு இடுகை போட்டு கிழிக்கிறாங்கய்யா. 5 காட்சிக்கு 25 விமரிசனம்லாம் டூ மச்சுங்கய்யா.
ரஜினி: அய்யா! நா சொன்னேன். திருட்டு விசிடி நல்ல விளம்பரம் உடனே ரிலீஸ் பண்ணுங்கன்னு. இவங்க அத விட வேகமா இண்டர்வல்லயே பொட்டி தட்டி பாதி படம் போர் மீதி பட விமரிசனம் தொடரும்னு போடுவாங்க போலய்யா. அடங்க மாட்றாங்க.
தலைவர்: இருங்கப்பா. முதல்ல ஒரு ஒரு படமா சொல்லுங்க. முதல்ல யாரு
ரா.ர: ஆயிரத்தில் ஒருவன்.
தலைவர்: ஐ ஊத்திகிச்சா? அம்மையார் படம் ஊத்திகிச்சா. உய் உய் அ உய்.
ரா.ர: தல தல. இது அதில்ல. இது செல்வராகவன்
தண்டோரா: ஆஆஆ. செல்வா எங்க எங்க! நான் கட்டி பிடிச்சி பாராட்டணும் எங்க?
செல்வா: அய்யாங். எம்பேண்டு. புடிங்க புடிங்க அவர.
ரா.ர. பாருங்க தலைவா! பய புள்ள எப்புடி பயந்து போயிருக்கு. விமரிசனம் எழுதறேன்னு அநியாயம் பண்றாங்க தலைவா.